ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

“மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மை - ஓர் ஆய்வு” (A STUDY OF ATTITUDES TOWARDS TECHNOLOGY AMONG STUDENTS IN SECONDARY SCHOOL)

திருமதி ந. ஹேமலதா*1, முனைவர். த. சகாய சைலா*2, என். கே. தி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 24 Mar 2023 Read Full PDF

கட்டுரையாளர்: திருமதி ந. ஹேமலதா*1, எம். எட், ஆய்வு மாணவி

நெறியாளர்: முனைவர். த. சகாய சைலா*2, உதவிப்பேராசிரியர்

என். கே. தி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005

Abstract (ஆய்வு சுருக்கம்)

A study was conducted on the attitudes of secondary school students towards technology. In this, 300 students studying in high schools in Chennai district were selected as research samples through a simple method. Using data collected from students. The results of the study which converted the data into value points and found the values of statistical analysis such as Mean Project Deviation and t-test showed a difference in attitude towards technology between male and female students of ninth grade. There is a difference in attitude towards technology among students studying in government aided schools. The results indicate that there is no difference in attitudes towards technology between public school and private school students. Intellectual inquiry occurs when technology is used to teach lessons to bridge these differences. It is clear from this study that positive attitude towards the subject can be enhanced by using technology to facilitate self-directed learning.

ஆய்வு சுருக்கம் (Abstract)

மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளில் பயிலும் 300 மாணவர்கள் எளிய முறையில் ஆய்வு மாதிரிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்தி. தரவுகளை மதிப்பு புள்ளிகளாக மாற்றி புள்ளியியல் பகுப்பாய்வுகளான சராசரி, திட்ட விலக்கம் மற்றும் t- சோதனை போன்றவற்றின் மதிப்புகளை கண்டறிந்து சோதிக்கப்பட்ட ஆய்வின் விளைவாக ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் வேறுபாடு காணப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் வேறுபாடு காணப்படுகிறது. அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் வேறுபாடு காணப்படவில்லை என்பதை முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த வேறுபாடுகளை களைவதற்கு தொழில்நுட்பத்தின் மூலம் பாடம் கற்பிக்கப்படும் போது அறிவார்ந்த தேடுதல் ஏற்படுகின்றது. பாடத்தை சொந்த விருப்பத்துடன் படிக்க தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் பாடத்தின் மீது நல்ல மனப்பான்மை அதிகரிக்கச் செய்யலாம் என்பது இந்த ஆய்வில் தெளிவாக புலனாகிறது.

திறவுச் சொற்கள்:  மேல்நிலைப்பள்ளி, தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மை.

முன்னுரை (Introduction)

கல்வி இன்று வெறும் பொருள் அறிவினைப் பரப்பும் கருவியாக இருத்தல் பயனற்றது. மாறிவரும் நிலைமைகளில், பெற்ற அறிவினை ஏற்ற முறையில் பயன்படுத்துதலில் இன்றைய கல்விமுறை மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.  அப்போதுதான் அது காலத்தின் தேவைகளுக்குப் பொருத்தமானதாக விளங்கும்.  நெட்டுருச் செய்து விவரங்களை ஒப்புவிப்பது இன்று தேவையில்லை.  புரிந்து கொண்டு செயல்படுதலே உடனடித் தேவை.  இதற்குச் செயல்வழிக் கல்விமுறை அவசியம்.  செயலில் கவர்ச்சி, ஈடுபாடு, ஊக்குவிப்பு போன்றவற்றுடன் மாணவனது பல்வேறு புலன்களின் வழியே அறிவு புகுகின்றது.  இத்தகைய பல புலன்களைக் கற்றலில் ஈடுபடுத்த கல்வித் தொழில்நுட்பக் கருவிகளும் முறைகளும் ஆசிரியருக்குப் பயன்படுகின்றன.  ஆசிரியரது கற்பித்தல் திறன் இத்துணைக் கருவிகளினால் உயர்நிலை அடைகின்றது. துணைக் கருவிகளும் பொருள்களும் ஆசிரியரது பணியினைத் தேவையற்றவையாகச் செய்வன அல்ல. ஆசிரியரது கற்பித்தலுக்குத்  துணை செய்வனவேயாகும். புலன்கள் மூலம் நாம் கற்பதைக் கல்வியியல் வல்லார் கணக்கிட்டுக் கீழ்கண்டவாறு கூறியுள்ளனர்.  நாம்  கற்பதை 100% எனக் கொண்டால்

  • சுவை மூலம்  1.0% 
  • தொடுபுலன் மூலம்  1.5%
  • நுகர்வு மூலம்  3.5%
  • செவி  மூலம்  11%
  • கண் மூலம்   8.3% 

      இதிலிருந்து காட்சி (கண்) கேள்வி (செவி) மூலம் மட்டும் நாம் பெறும் கற்றல் 94%  ஆகும்.

இதன் மூலம் காணல், கேட்டல் மூலம் நினைவு கொள்வது மிகுதி என்றும், பேசுவது, செய்வது மூலம் நினைவு கொள்வது மிக அதிகமென்றும் அறிகிறோம். எனவே ஆசிரியர் கற்பித்தலில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

ஆய்வின் தேவை (Need for the Current research)

பல்வேறு வகை வகுப்பறைக் கற்பித்தல் முறைகளுள் தொழில்நுட்பம் மூலம் கற்பித்தலில் மாணவர்களை முழுமையாகவும் ஆர்வத்தோடும் பங்குக் கொள்ள வைக்க முடியும். எனவே தொழில்நுட்பம் மூலம் மொழி பாடம் கற்பிக்கும் போது அமைகின்ற மனப்பான்மையைப் பற்றி அறிய இத்தலைப்பு ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆய்வு நோக்கம் (Objectives)

  • ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்குமிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் உள்ள வேறுபாட்டைக் கண்டறிதல்.
  • அரசுப்பள்ளி, அரசு-உதவிப்பெறும் பள்ளி மற்றும் தனியார்ப் பள்ளி மாணவர்களிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் உள்ள வேறுபாட்டைக் கண்டறிதல்.

கருதுகோள் (Hypothesis)

கருதுகோள் - 1

ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஆண் மற்றும் பெண் மாணவர்களிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் வேறுபாடு இல்லை.

கருதுகோள் - 2

அரசுப் பள்ளி, அரசு-உதவிப்பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் வேறுபாடு இல்லை.

மாதிரிக்கூறு (Sample Distribution)

ஒவ்வொரு ஆய்விலும் ஒரு முழுமைத் தொகுதியில் இருந்து ஒரு சிறு மாதிரிக்கூறு மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அக்கூறு விரிவாக ஆராயப்படும். கல்வி ஆய்வில் அடிப்படை விவரங்களைப் பெறவும், உண்மைகளை அறியவும் ஒரே தன்மையான பிரிவினரிடமிருந்து கருத்துக்களைப் பெறுவது பயன்தரக் கூடியனவாகும். இவ்வாய்விற்கு மாதிரிக் கூறாக அரசுப் பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களையும், அரசு உதவிப்பெறும் பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களையும், தனியார்ப் பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆய்வுக் கருவி (Tool Selection)

ஆய்வு கருவியானது தரம் செய்யப்பட்டதாகும்.  இத்தகைய தரப்படுத்தப்பட்ட ஆய்வுக் கருவியானது வினா நிரல் முறையைச் சார்ந்ததாகும்.  தரம் உறுதி செய்யப்பட்ட இந்த ஆய்வுக்கருவியின் நம்பகத்தன்மை r = 0.83 ஆகும். எனவே வினாப்பட்டியல் அதிக நம்பகத்தன்மை உடையதாக விளங்குகிறது. 

சார்பிலக்கிய மீள் பார்வை (Review of Related Literature)

குவோ, மிங்மு (2008)

      உலகில் கல்வியின் தரம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.  இதனால் வருங்காலத்திற்கு ஏற்றமாதிரி மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.  கணினித் துறையில் திறமை, பேச்சாற்றல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு நல்ல உறவு அமைய வேண்டும்.  ஆசிரியர்களின் அனுபவம், நம்பிக்கை, திறமை ஆகியவை இணையத்தளத்தைச் சார்ந்து அமைவதாக இருக்க வேண்டும்.  இவ்வாறாக ஆய்வை மேற்க்கொண்டுள்ளனர்.

கிம், தேசாங், கில்மேன், எ.டேவிட் (2008)

      “மல்டிமீடியா, கிராபிக்ஸ், படங்களைப் பார்த்து கற்றுக்கொள்ளல், ஒலிக்கருவி, தாமே கற்றல் இவற்றையெல்லாம் பயன்படுத்தி கல்வி எவ்வாறு கற்றல் என்று ஆராய்ச்சி மேற்க்கொண்டுள்ளனர்”.  மேற்க்கொண்டவற்றை எல்லாம் பயன்படுத்தி கற்பித்தால் இரண்டாவது மொழியில் சிறப்பாக முன்னேறுகின்றனர் என ஆராய்ந்துள்ளனர்.

ஆ. கருப்பசாமி (2006)

       “மேல்நிலைப்பள்ளித் தமிழ்த் துணைப் பாடத்தில் சென்னைப் பெருநகர் மாணவர்களின் ஈடுபாடு – ஓர் ஆய்வு” எனும் தலைப்பில் அ. கருப்பசாமி அவர்களால் சென்னை, அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் எம்.எட் பட்டத்திற்காக ஆய்வு சமர்பிக்கப்பட்டது.

தரவுப் பகுப்பாய்வு (Data Analyses)

அட்டவணை - 1

மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை

மாறுபாட்டிற்கான மூலம்

வரம்பற்ற பாகை (dt)

விலக்க வர்க்க கூடுதல்

விலக்க வர்க்க கூடுதலின் சராசரி

F-ன் மதிப்பு

சிறப்பு வரம்பு எல்லை

குழுவினருக்கிடையே

2

1471.647

735.823

9.926

0.01*

குழுவினருக்குள்ளே

297

22017.020

74.131

மொத்தம்

297

23488.667

809.954

மேற்கண்ட அட்டவணையில் F-ன் மதிப்பு 9.926 ஆகும்.  இம்மதிப்பு அட்டவணையின் 0.01 சிறப்பு வரம்ப எல்லையின் மதிப்பைவிட அதிகமாக இருப்பதால் “தொழில்நுட்பம்” பற்றிய மனப்பான்மையில் வேறுபாடு உள்ளது.

 கருதுகோள் - 2

அட்டவணை - 2

தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை.

வ. எண்

பள்ளியின் வகை

மாணவர்களின் எண்ணிக்கை

கூட்டு சராசரி

M

திட்ட விலக்கம்

 

SEM

t-ன் மதிப்பு

1

அரசு பள்ளி

100

63.83

9.416

0.942

3.182*

2

அரசு உதவிப்பெறும் பள்ளி

100

67.72

7.794

0.779

மேற்கண்ட அட்டவணையில் t-ன் மதிப்பு 3.182 ஆகும்.  இம்மதிப்பு அட்டவணையின் 0.01 சிறப்பு வரம்பு எல்லையின் மதிப்பைவிட அதிகமாக இருப்பதால் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கிடையே “தொழில் நுட்பத்தின்” மீதுள்ள மனப்பான்மையில் வேறுபாடு உள்ளது.

கருதுகோள் - 3

அட்டவணை - 3

தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை.

வ. எண்

பள்ளியின் வகை

மாணவர்களின் எண்ணிக்கை

கூட்டு சராசரி

திட்ட விலக்கம்

SEM

t-ன் மதிப்பு

1

அரசு பள்ளி

100

63.83

9.416

0.942

4.106*

2

தனியார் பள்ளி

100

69.05

8.543

0.854

மேற்கண்ட அட்டவணையில் t-ன் மதிப்பு 4.106 ஆகும்.  இம்மதிப்பு அட்டவணையின் 0.01 சிறப்பு வரம்பு எல்லையின் மதிப்பைவிட அதிகமாக இருப்பதால் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கிடையே “தொழில்நுட்பத்தின்” மீதுள்ள மனப்பான்மையில் வேறுபாடு உள்ளது.

கருதுகோள் - 4

அட்டவணை - 4

தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் எந்தவித வேறுபாடும் இல்லை.

வ. எண்

பள்ளியின் வகை

மாணவர்களின் எண்ணிக்கை

கூட்டு சராசரி

திட்ட விலக்கம்

SEM

t-ன் மதிப்பு

1

அரசு உதவிப் பெறும் பள்ளி

100

67.72

7.794

0.779

1.15

2

தனியார் பள்ளி

100

69.05

8.543

0.854

மேற்கண்ட அட்டவணையில் t-ன் மதிப்பு 1.15 ஆகும்.  இம்மதிப்பு அட்டவணையின் 0.01 சிறப்பு வரம்பு எல்லையின் மதிப்பை விட குறைவாக இருப்பதால் அரசு உதவிப்பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கிடையே “தொழில்நுட்பத்தின்” மீதுள்ள மனப்பான்மையில் வேறுபாடு இல்லை.

ஆய்வு முடிவு (Research Findings)

கருதுகோள் - 1

     மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை.

            இக்கருதுகோள் F-சோதனையின் மூலம் சோதிக்கப்பட்டுள்ளதை அட்டவணை 1 குறிப்பிடுகிறது.

      எனவே, மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் வேறுபாடு உள்ளதால் இன்மைக் கருதுகோளானது நிராகரிக்கப்படுகிறது.

கருதுகோள் - 2

     தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை.

     இக்கருதுகோள் t - சோதனையின்மூலம் சோதிக்கப்பட்டுள்ளதை அட்டவணை 2 குறிப்பிடுகிறது.

     எனவே, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் வேறுபாடு உள்ளதால் இன்மைக் கருதுகோளானது நிராகரிக்கப்படுகிறது.

கருதுகோள் - 3

     தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை.

      இக்கருதுகோள் t-சோதனையின் மூலம் சோதிக்கப்பட்டுள்ளதை அட்டவணை 3 குறிப்பிடுகிறது.

      எனவே, அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் வேறுபாடு உள்ளதால் இன்மைக் கருதுகோளானது நிராகரிக்கப்படுகிறது.

கருதுகோள் - 4

     தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை.

      இக்கருதுகோள் t-சோதனையின் மூலம் சோதிக்கப்பட்டுள்ளதை அட்டவணை 4 குறிப்பிடுகிறது.

      எனவே, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கிடையே தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் வேறுபாடு இல்லை என்பதால் இன்மைக் கருதுகோளானது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கல்வியியல் தாக்கம் (Educational Implications)

மாணவர்களின் மனப்பான்மையினை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிய உதவுகிறது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடைய தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மை அளவினை அறிந்து அவர்களை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள உதவுகிறது. அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே மனப்பான்மையினை அறிந்து அவர்களை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள உதவுகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் பாடம் கற்பிக்கப்படும் போது அறிவார்ந்த தேடுதல் ஏற்படுகின்றது.

ஆய்வு பரிந்துரை (Suggestions for Further Research)

ஆய்வாளர் தம் படிப்பு மற்றும் பட்டறிவிற்கேற்ப இந்த ஆய்வைத் தொடர்ந்து தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மையில் கீழ்வரும் தலைப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

  • மாணவர்களுக்கு தமிழ்பாடம் அல்லது மொழியில் உள்ள பற்று பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.
  • அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே தமிழ்பாடத்தின் மீது உள்ள ஆர்வம் பற்றி ஆய்வு மேற்கொள்ளலாம்.
  • மனப்பான்மை குறைவதற்கானக் காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளலாம்.
  • மாணவர்களிடையே அறிவியல் பாடத்தின் மீது உள்ள ஆர்வம் பற்றி ஆய்வு மேற்கொள்ளலாம்.
  • மனப்பான்மையை மேம்படுத்தும் வழிமுறைகளைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளலாம்.
  • மாணவர்களின் மனப்பான்மைக்கும், மாணவ ஆசிரியர்களின மனப்பான்மைக்கும் உள்ள தொடர்பைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளலாம்.
  • தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் பொருளாதார அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பற்றி ஆய்வு மேற்கொள்ளலாம்.
  • வகுப்பறை சூழலுக்கும், தொழில்நுட்பம் மூலம் தமிழ் கற்பித்தலுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளலாம்.

முடிவுரை (Conclusion)

“மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பம் பற்றிய மனப்பான்மை - ஓர் ஆய்வு” என்னும் இவ்வாய்வில் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டு, புள்ளியில் முறைகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டது. இதில் கண்டுபிடிப்புகள் கல்வியின் பரிந்துரைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

மேற்பார்வை நூல்கள் (Reference)

கருப்பசாமி. ஆ (2006) மேல்நிலைப்பள்ளித் தமிழ்த் துணைப்பாடத்தில் சென்னைப் பெருநகர் மாணவர்களின் ஈடுபாடு – ஓர் ஆய்வு.

கிம், தேசாங், கில்மேன், எ.டேவிட் (2008) மல்டிமீடியா, கிராபிக்ஸ், படங்களைப் பார்த்து கற்றுக்கொள்ளல், ஒலிக்கருவி, தாமே கற்றல் இவற்றையெல்லாம் பயன்படுத்தி எவ்வாறு கல்வி கற்றல் - ஓர்  ஆய்வு.

வேணுகோபால் இ.பா. (1993) மணிகல்வி உளவியல், சகுந்தலா வெளியீட்டகம், இந்திராணி, வேலூர் - 632512.

ராமச்சந்திரன் .பூ (1978) தமிழில் பிழையாய்வு – எனும் தலைப்பில், தமிழில் காணப்படும் பிழைகளை ஆய்வு செய்துள்ளார்.

ஜான்சி பென்னல், ஏன்ஜல், டிகாங்கி, சாம்வெல் (1999) வலைத்தளம் மூலமாக மாணவர்களின் மனப்பான்மை எவ்வாறு உள்ளது – ஓர் ஆய்வு.