ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

மெய்நிகர் வகுப்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வு பற்றிய ஆய்வு

ந. ஞானசௌந்தரி, என் கே திரு திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி)சென்னை-600005   11 May 2022 Read Full PDF

கட்டுரையாளர்: ந. ஞானசௌந்தரி, என் கே திரு திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி)சென்னை-600005           

நெறியாளர்: முனைவர் டாக்டர் எஸ்.மாலதி, என் கே திரு திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி)சென்னை-600005.

ஆய்வுச்சுருக்கம்

மெய்நிகர் வகுப்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் ஆர்வம் மற்றும் அடைவுத் தேர்வு பற்றிய ஆய்வானது செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 300 ஒன்பதாம் வகுப்பு பள்ளி  மாணவர்களை எளிய தன் நிகழ்வு ஆய்வு முறையில் ஆய்வு மாதிரிகளாக தேர்வு செய்யப்பட்டனர் .எளிய தன்நிகழ்வு மாதிரி தரவு வடிவமைக்கப்பட்டது மற்றும் தரவை ஆய்வாளர் வடிவமைத்தார் ஆராய்ச்சி தரவை சேகரிக்க அணுகுமுறை அளவுகோல் ஆய்வாளரால் செய்யப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவினை பயன்படுத்தி சோதிக்கப்பட்டது சராசரி புள்ளியியல் பகுப்பாய்வு Deplanation ,T -testமுதலியன மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விளைவாக

  • மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத் தேர்வில் தொடர்பு உள்ளது.இடைநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவு தேர்வில் வேறுபாடு உள்ளது.தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு இடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வில் வேறுபாடு உள்ளது.இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே பள்ளியின் வகையைப் பொருத்து வேறுபாடு இல்லை.
  • முக்கிய வார்த்தைகள்:

மெய்நிகர், ஆர்வம், அடைவுத்தேர்வு, ஒன்பதாம் வகுப்பு, வித்தியாசம்

Synopsis

The study was conducted on the interest and directory selection of ninth grade students in the virtual class. 300 ninth grade school students in Thanjavur district were selected as study models in a simple self-study method Simple Spontaneous Sample Data was designed and designed by the Data Analyst The approach to collecting research data was done by the Criterion Analyst. Tested using collected data Average statistical analysis Result of study conducted by Deplanation, T-test etc.

Interest in virtual class is related to directory exam.There is a difference in interest and directory exam in virtual class between middle school students

nterest in virtual class is related to directory exam.There is a difference in interest and directory exam in virtual class between middle school students.

Keywords: Virtual, curiosity, directory selection, ninth grade, difference

1.முன்னுரை;

  • சிறந்த குடிமக்களாக வாழத் தேவைப்படும் அறிவும் ஒழுக்கமும் உடைய மாணவர்களை உருவாக்குதல் ,தலைமைதாங்கும் பண்புள்ளவர்களாக மாற்றுதல், கல்வியின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு செயலிலும் வாய்ப்பினை ஏற்படுத்துதல் போன்ற பண்புகளை இளம் தலைமுறையினர் பெற்று நாட்டின் சிறந்த குடிமகனாக திகழ வேண்டும்.

அடிப்படைக் கல்வி என்பது தற்போதுள்ள கோவிட் காலத்தில்  மெய்நிகர் வகுப்பின் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது.மாணவர்களின் கற்றல் ஆர்வமும் அது எந்த அளவிற்கு ஒரு அடைவினை பெற்றிருக்கிறது என்பதை பற்றி அறியவே இந்த ஆய்வு தேவைப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடையே எவ்வகையில் இந்த மெய்நிகர் வகுப்பு சிறப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என்பதையும்  அடைவுத் தேர்வையும் கண்டறிய இந்த ஆய்வு பயன்படுகிறது.

2.ஆராய்ச்சியின் தேவை மற்றும் முக்கியத்துவம்

  • இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கோவிட் காரணத்தினால் மாணவர்களின் நலன் கருதி மாணவர்களின் கற்றல்  நிற்காமல் இருக்க உலகமெங்கிலும் அனைத்து பள்ளிகளிலும் மெய்நிகர் வகுப்பு மூலம் கல்வித்துறை அமைப்பு கற்றலைநடத்தி வருகிறது .
  • மாணவர்களின் நலன் கருதி வீட்டிலேயே பாடங்களை இணையதளம் மூலம் நடத்தி வருகிறது இதன் மூலம் மாணவர்களின் கற்றல் நிற்காமலும் அவர்களின் படிப்படியான வளர்ச்சி நிற்காமல் இருக்க இத்தளம் மிக மிக முக்கியமாகின்றது.
  • இவ்வகை தொகுப்பானது எந்த அளவு பயனுள்ளதாக இருந்தது என்பதைக் கண்டறியவே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடம் மட்டும் மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வு என்று தலைப்பினை கொண்டு இவ் ஆய்வினை மேற்கொண்டேன்.
  • ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடையே அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என்றுமூன்று நிலைகளிலும் எவ்வாறு மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் அடைவுத்தேர்வு  மாறுகிறதா இல்லையா என்பதைப் பற்றியும் அறியவே இந்த ஆய்வினை மேற் கொண்டேன்.

3. ஆய்வின்நோக்கம் :

  • மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வுக்கும் இடையே ஒட்டுறவு  கெழு உள்ளதா என்பதைக் கண்டறிதல்.
  • இடைநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே மெய்நிகர்                 வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வுக்கும் இடையே வேறுபாடு உள்ளதா என்பதைக் கண்டறிதல்.
  • அரசுப்பள்ளி ,தனியார் பள்ளி மற்றும் ,அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களிடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வுக்கும் இடையே  வேறுபாடு உள்ளதா என்பதை கண்டறிதல்.
  • தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களிடையே மெய்நிகர்                 வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வுக்கும் இடையே  வேறுபாடு உள்ளதா என்பதை கண்டறிதல்.

4.ஆய்வின் கருதுகோள்கள்:

  • மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வுக்கும் இடையே தொடர்பு இல்லை .
  • இடைநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வில் வேறுபாடு இல்லை.
  • அரசுப்பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களிடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத் தேர்விலும் வேறுபாடு இல்லை என்பதை கண்டறிதல்.
  • தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களிடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத் தேர்வில் வேறுபாடு இல்லை என்பதை கண்டறிதல் .

   5.ஆய்வு மாதிரி :

  • தஞ்சாவூர் மாவட்டத்தில்  மூன்று உயர்நிலைப் பள்ளிகளை( அரசுப்பள்ளி ,தனியார் பள்ளி மற்றும்,அரசு உதவி பெறும் பள்ளி)தெரிவுசெய்து ஒரு பள்ளிக்கு 100 மாணவர்கள் வீதம் 300 மாணவர்களை எளிய தன் நிகழ்வு மாதிரி கூறெடுத்தல் முறையில் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மாதிரிகளாக உட்படுத்தப்பட்டனர்.

 6. ஆய்வுக் கருவி

  • மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் தொடர்பான வினாக்கள் ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டு தரப்படுத்தப்பட்டது .
  • பாட வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனையின் அடிப்படையில் ஆய்வுக்கு ஏற்புடைமை உருவாக்கி ஐம்பது மாணவர்களிடம் சோதனை, மறு சோதனை முறையில் நம்பகத்தன்மை கணக்கிடப்பட்டது .
  • நம்பகத்தன்மை யின் மதிப்பு r=0.752 தரப்படுத்தப்பட்ட  மெய்நிகர் வகுப்பில் ஆர்வத்தின் அளவுகோல் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

8.புள்ளியியல் பகுப்பாய்வு:

  • இடைநிலைப் பள்ளி மாணவர்களிடம் பெறப்பட்ட தரவுகளை மதிப்பு புள்ளிகளாக மாற்றி புள்ளியியல் பகுப்பாய்வுகளான சராசரி, திட்ட விலக்கம், மற்றும்- t -சோதனை போன்றவற்றை கண்டறிந்து கருதுகோள்கள் சோதித்து அறியப் பட்டன.

9.ஆய்வின் வரம்பு;

  • இந்த ஆராய்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 300 மாணவ மாணவிகள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர் .
  • ஆராய்ச்சியாளர் மெய்நிகர் வகுப்பில் மாணவர்களின்  அளவுகோல் வடிவமைக்கப்பட்டு தரப்படுத்தப்பட்டது.

10.கருதுகோளைச் சோதித்து அறிதல் :

  • கருதுகோள் 1

 இடைநிலைப் பள்ளி மாணவர்களின் மெய்நிகர் வகுப்பில்  ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வு , பாலினம், பள்ளியின் வகை, பயிற்றுமொழி போன்றவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.

சோதனை 1: ஆய்வின் கருதுகோள்கள்

மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத்  தேர்வுக்கும் உள்ள ஒட்டுறவு கெழு  காட்டும் அட்டவணை.

 

மாறிகள்

 

                          R –VALUE  ( மதிப்பு )

 

அடைவுத்தேர்வு

 

 

 

                           0.460

 

ஆர்வம்

            ** ஒட்டுறவுக் கெழு அளவு 0.01 ஆகும்.

மேற்கண்ட அட்டவணை மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவு தேர்வில் தொடர்பு உள்ளது என உறுதிப்படுத்தப்படுகிறது .எனவே மேற்கண்ட கருதுகோள் மறுக்கப்படுகிறது.

சோதனை ; ஆய்வின் கருதுகோள்கள் 2:

ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு இடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவு தேர்வில் வித்தியாசம் இல்லை.

 

மாறிகள்

 

பாலினம்

 

மாணவர்களின் எண்ணிக்கை

 

சராசரி

 

திட்டவிலக்கம்

t  யின் மதிப்பு

முடிவு

 

 

 

 

அடைவுத்தேர்வு

 

ஆண்

150

381

47

.304

வித்தியாசம் இல்லை

 

பெண்

150

382

43

 

 

ஆர்வம்

 

ஆண்

150

162

17

1.98

 

வித்தியாசம் உள்ளது

 

பெண்

150

166

13

 

மேற்கண்ட அட்டவணை

ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இடையே மெய்நிகர் வகுப்பில் அடைவு தேர்வுக்கும் இடையே வித்தியாசம் இல்லை என உறுதிப்படுத்தப்படுகிறது.

எனவே மேற்கண்ட கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வத்திற்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

என உறுதிப்படுத்தப்படுகிறது.

எனவே ஆர்வத்திற்க்கான கருதுகோள் மறுக்கப்படுகிறது.

சோதனை ; ஆய்வின் கருதுகோள்கள் 3:

தமிழ்வழிக் பயில்வோருக்கும் ஆங்கிலவழி பயில்வோருக்கும்இடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவு தேர்வில் வித்தியாசம் உள்ளது.

 

மாறிகள்

 

பயிற்று மொழி

 

மாணவர்களின் எண்ணிக்கை

 

சராசரி

 

திட்டவிலக்கம்

 

t  யின் மதிப்பு

 

முடிவு

 

 

 

அடைவுத்தேர்வு

 

தமிழ்

 

150

389.7

42.8

 

 

2.00

 

 

0.05

 

ஆங்கிலம்

 

150

 

378.1

46.42

 

ஆர்வம்

 

தமிழ்

150

162.4

15.06

 

 

1.559

 

 

வித்தியாசம் உள்ளது

 

ஆங்கிலம்

 

150

165.4

16.24

  • ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இடையே மெய்நிகர் வகுப்பில் அடைவு தேர்வுக்கும் இடையே வித்தியாசம் இல்லை என உறுதிப்படுத்தப்படுகிறது.

எனவே மேற்கண்ட கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

  • ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வத்திற்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

என உறுதிப்படுத்தப்படுகிறது.

எனவே ஆர்வத்திற்க் கான கருதுகோள் மறுக்கப்படுகிறது

சோதனை ; ஆய்வின் கருதுகோள்கள் 4:

பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவு தேர்வில் வித்தியாசம் இல்லை.

பள்ளிகளின் அடிப்படையில் ஆர்வம் மற்றும் அடைவு தேர்வில் உள்ள வித்தியாசத்தை காட்டும் அட்டவணை.

 

 

மாறிகள்

 

 

 

சதுரங்களின் கூட்டுத்தொகை

 

DF

 

சராசரி

 

    F

 

முடிவு

 

 

 

 

அடைவுத்தேர்வு

குழுக்களுக்கு உள்ளே

609807.6

297

2053.2

 

 

 

 

2.313

வித்தியாசம் இல்லை

.101

குழுக்களுக்கு இடையே

9496.3

2

4748.1

மொத்தம்

619303.9

299

 

 

 

 

 

 

 

 

ஆர்வம்

குழுக்களுக்கு உள்ளே

74546.70

297

250.9

 

 

 

 

2.164

வித்தியாசம் இல்லை

.117

குழுக்களுக்கு இடையே

 

1086.38

2

543.1

மொத்தம்

75633.080

299

 

 

 

 

மேற்கண்ட அட்டவணைப்படி பள்ளிகளின் அடிப்படையில் மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவு தேர்வில் வித்யாசம் இல்லை என உறுதிப்படுத்தப்படுகிறது.

எனவே மேற்கண்ட கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஆய்வின் முடிவுகள்:

  • மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத் தேர்வில் தொடர்பு உள்ளது.
  • இடைநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவு தேர்வில் வேறுபாடு உள்ளது.
  • தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு இடையே மெய்நிகர் வகுப்பில் ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வில் வேறுபாடு உள்ளது.
  • இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே பள்ளியின் வகையைப் பொருத்து வேறுபாடு இல்லை.

முடிவுரை:

இந்தியாவின் எதிர்காலம் வருங்கால மாணவர்களின் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது .எனவே மாணவர்களின் கற்றல் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகிறது. நாளைய தலைமுறையை நல்ல தலைமுறையாக மாற்ற இக்காலக் கல்விமுறை பெரிதும் துணைபுரிகிறது .இத்தகைய கற்றல் மாறிவரும் இயற்கை சூழல் ,பேரிடர், பெரும் தொற்று(கோவிட் ) , காரணமாக நிற்காமல் தொடர்ந்து மாணவர்கள் கற்றலை மெய்நிகர் வகுப்பின் மூலமாக கற்பித்து அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு சமுதாயத்தில் எல்லா சூழல்களிலும் எல்லா சந்தர்ப்பங்களையும் எதிர்த்து போரிட மாறிவரும் தொழில்நுட்பங்கள் பற்றியும் கற்பித்து எல்லா சூழலிலும் சிறந்த மாணவனாக மாற்ற வேண்டும் என்பதே மெய்நிகர் வகுப்பின் முக்கிய நோக்கமாகும் அவ்வகுப்பில் மாணவரின் ஆர்வம் மற்றும் அடைவுத்தேர்வு சிறந்ததாகவே உள்ளது என்பதை இவ்வாய்வின் மூலம் விளக்குகிறோம்.

மேற்பார்வை நூல்கள்;

கல்வி ஆராய்ச்சியில் அடிப்படைகள்

பேராசிரியர் முனைவர் அ.மீனாட்சி சுந்தரம்

  • ஆன்லைன் கற்றலின் நன்மைகள் மற்றும் தீமைகள்  -e-learning industry.
  • ஆன்லைன் பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான நிபுணர் உத்திகள்    

https://www.insidehighered.com/digital-learning/advice