திருச்செல்வம் கிஷாந்தினி, உதவி விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
ஆய்வுச் சுருக்கம்: இந்திய மெய்யியலின் எல்லாக் கிளைகளிலுமே காரண காரியத் தொடர்பு ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. மெய்யியலாளர்கள் காரணத்துவத்தை ஆய்வுகளுக்கான ஒரு பிரதான தலையங்கமாக ஏற்றுக் கொள்கிறார்கள். இந்திய மெய்யியல் முறைமை ஒவ்வொன்றினதும் யதார்த்தம் பற்றிய கருத்தியல், காரண காரியத் தொடர்பு கோட்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. காரணக் கொள்கை தொடர்பான மெய்யியலாய்வுகளில் எழுகின்ற அடிப்படையான மூலப்பிரச்சினைகளில் காரியம் காரணத்தில் ஏலவே உள்ளுறைந்துள்ளதா? அல்லவா? என்ற பிரச்சினையே முதன்மையானது. இந்து மெய்யியல் முறைமைகளிடையே காரண காரியத் தொடர்புகள் சம்பந்தப்பட்ட மூன்று பிரதான கோட்பாடுகள் நிலவுகின்றன. அவையாவன சுபாவ வாதம், சத்காரிய வாதம், அசத்காரிய வாதம் எனும் மூன்றுமாகும். சத்காரிய வாதம் பரிணாமவாதம், விவர்த்த வாதம் எனவும், அசத்காரிய வாதம் ஆரம்ப வாதம், பிரதீத்யசமுத்பாத வாதம் எனவும் இரு வகைப்படுகின்றன. இக்கோட்பாடுகளுள் சாங்கிய மெய்யியல் காரியம் காரணத்தில் ஏலவே உள்ளடங்கி உள்ளது. ‘உள்ளது இலதாகாது’ என்ற அடிப்படையில் சத்காரிய வாதத்தை ஏற்றுக் கொள்வதை வெளிக்கொணர்வதாக இக்கட்டுரை அமைகிறது
PAGES: 9 | VIEWS | DOWNLOADS
திருச்செல்வம் கிஷாந்தினி, உதவி விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை. | சாங்கியம் கூறும் காரண காரிய வாதம் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |