முனைவர் கா. சந்தானலெட்சுமி, இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை
ஆய்வுச்சுருக்கம்: திருக்குறளும், அர்த்தசாஸ்திரமும் மக்களுக்கான பயன்பாட்டில் சிறப்பான பங்களிப்பையே தருகின்றன. இவ்விருநூற்களின் பொருளியல் நோக்கிலான கருத்துக்கள் மட்டுமே இவ்வாய்வுக் கட்டுரையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ‘ பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற திருவள்ளுவரின் கருத்தின் அடிப்படையில் மண்ணுலகில் மானுட வாழ்க்கை வளம் பெற ‘பொருள்’ முக்கியமானதாகின்றது. நன்மக்களால் நல்வழியில் ஈட்டப்படும் பொருளே நாட்டிற்கு வளம் சேர்க்கும். உலகளாவிய நோக்கில் போர், பிணி, இயற்ககைச்சீற்றங்களால் பொருளாதார வாழ்க்கை பாதிப்படைகிறது. சமூக சூழ்நிலை மண்டலத்தில் மனித வாழ்வானது ஒன்றோடொன்று தொடர்புடையதாக அமைகின்றது. அந்த வகையில் விளக்கமுற அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறை மற்றும் ஒப்பீட்டாய்வு அணுகுமுறை என்ற முப்பரிமாண நோக்கில் திருக்குறள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தின் பொருளியல் கருத்துக்கள் மட்டும் இவ்வாய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மக்களின் எதிர்கால வளர்ச்சியின் உயர்விற்கும் பாதுகாப்பிற்கும் உதவும் வகையில் இவ்வாய்வின் நோக்கம் அமைகிறதெனலாம்.
PAGES: 12 | VIEWS | DOWNLOADS
முனைவர் கா. சந்தானலெட்சுமி, இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை | பொருளியல் நோக்கில் திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |