Volume 6, Issue 1

இருத்தல் கட்டமைப்பும் சமூக மரபாக்கமும்

Author

ஆய்வாளர்: சு.ஷண்முகப்பிரியா முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர் ச.சுபாஷ் உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, சமூக அறிவியல் & மொழிகள் புலம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: சங்ககாலச் சமூகக் கட்டமைப்பிற்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் இருத்தல் என்ற உரிப்பொருளின் இயல்பை நிலத்துடன் இயைத்துக் கூறுகிறது. இலக்கியங்களில் உரைக்கப்படும் உரிப்பொருள்கள் என்பன வெறும் திணையுணர்கருவிகளாக மட்டுமே செயற்படுவதில்லை. அஃது ஒரு சமூகக் கட்டமைப்பின் மரபு நுண்ணரசியலை எடுத்தியம்புவதாகவும் அமைகிறது. இருத்தல் என்ற உணர்வுசார் நிலைப்பாடு ஓர் இலக்கிய மரபிற்குள் கொண்டுவரப்பட்டதன் மையப்புள்ளி யாதென்ற வினா எழும்புகிறது. இருத்தலின் மையப்புள்ளியாக ஒரு குறிப்பிட்ட பால்பாகுபாடு சார்ந்த பொருண்மை இருக்கிறது. சமூகத்தின் ஒழுக்கமாக இருத்தலை ஆக்கம் செய்வதற்கு இலக்கியத்தின் ஊடாக மதிப்புநீட்சி செய்யப்பட்டுள்ளது. தொழிற்பிரிவு தொடங்கி உடைமைப்பூணல் வரை பல எண்ணற்ற மதிப்பாக்கங்கள் சமூகத்தில் இருத்தல் ஒழுக்கத்தினை ஆழங்கொள்ளச் செய்திருக்கிறது. கற்பு என்ற செயற்பாடு இருத்தலுக்குள் துளிர்விட்ட செயற்கைச்சின்னமாகும். இருத்தல் என்பது ஓர் இலக்கியத்திற்குள் எவ்வெவ்வற்றின் துணைகொண்டு பாடுபொருளுக்குப் பலம் சேர்த்துள்ளது என்பதை அறியும் விதத்திலும் உடைமைச் சமூகத்திற்கு இருத்தல் எத்தகைய வழிவகை செய்துள்ளது என்பது குறித்தும் இயற்கை ரீதியிலான நிலவியல், காலம் ஆகியன இருத்தல் கட்டமைப்பில் எவ்வாறு பங்குகொண்டுள்ளன என்பது பற்றியும் நிறுவனமாக்கப்பட்ட மையத்தில் இருந்து இருத்தல் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது குறித்தும் இலக்கிய இலக்கணங்களின் துணைகொண்டு ஆராயும் விதமாக இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.

DOI

PAGES: 11 | VIEWS | DOWNLOADS


Download Full Article

ஆய்வாளர்: சு.ஷண்முகப்பிரியா முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர் ச.சுபாஷ் உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, சமூக அறிவியல் & மொழிகள் புலம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் | இருத்தல் கட்டமைப்பும் சமூக மரபாக்கமும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)