Volume 1, Issue 4

சங்ககால நோக்கில் பெண்ணினம் - ஒரு பார்வை

Author

முனைவர் க.லெனின், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் - 635 130

Abstract

சங்ககால மக்கள் காதலிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினார்கள். சங்கப்பாக்கள் ஒவ்வொன்றும் தமிழரின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்தியம்பும். அகத்திணையில் தலைவனுக்காகத் தலைவி ஏங்குவதும் தலைவிக்காகத் தலைவன் நெஞ்சிற்குச் சொல்லியதும் குடும்பத்தின்பால் கணவன் மனைவியின் உறவை வெளிக்காட்டி நிற்பதாகும். ஒவ்வொரு மனிதனும் உள்ளத்தில் பேரன்போடு வாழ்வானாயின் இவ்வுலகம் பேறுபெற்றதாய் விளங்கும். ஆனால் கோபம், பொய், பொறாமை, வஞ்சகக் குணத்தோடுதான் நிறைய மனிதர்கள் உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். சங்ககாலத்தில் மனிதர்களின் கோபம் எங்கே வெளிப்படுகிறது? புறத்திணையில் போர்க்களங்களில் அடிமனதில் தோன்றும் கோபத்தின் எல்லையே ஒருவரை ஒருவர் வீழ்த்துகின்றனர். போரின் காரணமாக இறந்து போன மனிதப் பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அவர்களின் தாய், தாரம், மகள் எங்கே? அவர்கள் இவ்வுலகத்தில் எத்தனை துன்பங்களை அனுபவித்தாக வேண்டும். சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு சூழ்நிலை மாற்றத்திற்கும் பெண்ணே பாதிக்கப்படுகிறாள். குடும்பத்தின் சுமையையும் சுமக்க வேண்டும். சமுதாயத்தின் பார்வையையும் தவிர்க்க வேண்டும். சங்ககாலப் பெண்களின் உயர்வு தாழ்வை வெளிப்படுத்த முற்படுகிறது இவ்வாய்வு.

DOI

PAGES: 16 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் க.லெனின், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் - 635 130 | சங்ககால நோக்கில் பெண்ணினம் - ஒரு பார்வை | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)