முருகையா சதீஸ் தமிழ் சிறப்புக்கலை மாணவர் தமிழ்த்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இலங்கை
ஆய்வுச்சுருக்கம்: பி.ஆர்.ராஜமய்யர் அவர்களால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம் தத்துவ வீச்சோடும், கச்சிதமான உருவ அமைப்போடும் அமைந்து, நாவல் என்ற இலக்கிய வடிவத்திலும், திறனாய்வு அடிப்படையிலும் தமிழின் முதல் நாவல் என்ற தகுதியைப் பெறுகிறது. கதையமைப்பில் மிகுந்த தனித்தன்மை கொண்டது. இன்றுவரையும் கருவினால் இதற்கு இணையாகப் பேசக்கூடிய மற்றொரு நாவல் எழுதப்படவில்லை. எளிய நடையில் முற்றிலும் சமகால வாழ்வின் சிக்கல்களாலும், மெலிதான நகைச்சுவை மற்றும் கதைப்பின்னலாலும் அமைத்துள்ளார். அக்காலத்து நிலமானிய சமூக நடைமுறைகளையும், நிலமானிய சமூகத்தில் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து போகின்ற நிலையையும் இந்நாவலில் பார்க்க முடியும். அதுமட்டுமன்றி அக்காலப் பெண்களின் மனப்போக்கு, அக்காலச் சமூகநிலை, குடும்பங்களின் பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், பிள்ளை வளர்ப்பு முதலான பல்வேறு விடயங்களை உணர்த்துவதற்கு யதார்த்த நெறி ராஜமய்யரால் கையாளப்பட்டுள்ளது. எனவே இத்தகைய சிறப்புக்களோடு கூடிய “கமலாம்பாள் சரித்திரம்”, தமிழ் நாவல் வரலாற்றில் எத்தகைய முக்கியத்துவத்தினைப் பெறுகிறது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்விற்கு, முதலாம் நிலைத்தரவாகக் “கமலாம்பாள் சரித்திரம்” பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டாம் நிலைத்தரவுகளாக இந்நாவல் சார்ந்த கட்டுரை நூல்கள், சஞ்சிகைகள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே தொடக்ககாலத்திலேயே உருவ, உள்ளடக்கத்தில் சிறப்புற்றுத்தோன்றிய நாவல் என்னும் பெருமையைக் “கமலாம்பாள் சரித்திரம்” பெறுகின்றது எனலாம்.
PAGES: 12 | VIEWS | DOWNLOADS
முருகையா சதீஸ் தமிழ் சிறப்புக்கலை மாணவர் தமிழ்த்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இலங்கை | தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |