பூபாலசிங்கம். தனேஸ், தற்காலிக உதவி விரிவுரையாளர், ஓப்பீட்டுச் சமயம் மற்றும் சமூக நல்லுறவுத்துறை, கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்
ஆய்வின் சுருக்கம்: ஒவ்வொரு மதமும் தன் கடவுள் அல்லது கடவுள்களை விளக்கி ஓர் நம்பிக்கைக் கட்டமைப்பை எடுத்துரைக்க தனக்கென ஒரு புனித நூல் தனை கொண்டுள்ளது. அந்த வகையில் இந்து சமய புனித நூல்களில் ஒன்றாக பகவத்கீதையும் இஸ்லாம் சமய புனித நூலாக திருக்குர்ஆனும் விளங்குகின்றன. பகவத்கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத்கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்கொள்ளப்படுகிறது. “பகவத்” என்றால் இறைவன். “கீதா” என்றால் நல்ல உபதேசம். இது போலவே வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய நூலே திருக்குர்ஆன் ஆகும். “குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்கொள்ளப்படுகிறது. அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.
PAGES: 16 | VIEWS | DOWNLOADS
பூபாலசிங்கம். தனேஸ், தற்காலிக உதவி விரிவுரையாளர், ஓப்பீட்டுச் சமயம் மற்றும் சமூக நல்லுறவுத்துறை, கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம் | பகவத்கீதையும் திருக்குர்ஆனும் வெளிப்படுத்துகின்ற கடவுட் கோட்பாடு - ஓர் ஒப்பீட்டாய்வு | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |